செல்போன்களுக்கு ஆபாச படங்களை டவுன்லோடு செய்து தந்த வாலிபர் கைது!!
அகஸ்தீஸ்வரம் மாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நீலராஜன் (வயது 24). இவர் அகஸ்தீஸ் வரம் தெற்கு சாலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
நீலராஜன், அந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் வாலிபர்களின் செல்போன்களுக்கு ஆபாச படங்களை டவுன்லோடு செய்து கொடுப்பதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான புகாரின் பேரில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் அந்த கம்ப்யூட்டர் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நீலராஜன், லேப்–டாப் மூலம் வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு ஆபாச படம் ஏற்றிக்கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த ஆபாச படங்களை பெறுவதற்காக இளைஞர்கள் கூட்டம் அவரது கம்ப்யூட்டர் சென்டரில் அலை மோதியுள்ளது. ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து கொடுக்க நீலராஜன் பணமும் வசூலித்துள்ளார். இதில் பணம் அதிகளவில் புரளவே இந்த தொழிலை அவர் தொடர்ந்து அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நீலராஜனை கைது செய்தனர்.
மேலும் அவர் பயன்படுத்திய லேப்–டாப்பில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்தன. அந்த லேப்–டாப்பையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நீலராஜனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இன்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Average Rating