காதல் தொடர்பை கண்டித்த தந்தை: மனமுடைந்து சிறுமி தற்கொலை!!
Read Time:55 Second
தெமட்டகொடை – மிஹிதுசேனபுர அடுக்குமாடி வீட்டுத் தொடரின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
14 வயதான இவர் காதல் தொடர்பு காரணமாக தந்தை கண்டித்ததை அடுத்து மனமுடைந்து, நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுமி மாடியில் இருந்து குதித்த பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தெமட்டகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating