மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது!!
திட்டக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் 7–ம் வகுப்பு படித்த 2 மாணவிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார்கள். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவிகளை தேடி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 மாணவிகளும் திருச்சியில் மீட்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 2 மாணவிகளையும் திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் தனது வளையில் சிக்க வைத்து அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அருள்தாஸ் மற்றும் திட்டக்குடி பெரியார் நகரை சேர்ந்த தணலட்சுமி, கலா, ஜெமீனா உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த மாணவிகளை வடலூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் விபசாரத்தில் தள்ளியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், நம்மாள்வார், சர்மிளா, பாத்திமா, மகாலட்சுமி உள்பட 8 பேரை கைது செய்தனர். தற்போது இந்த வழக்கில் மேலும் 2 பேர் போலீசிடம் சிக்கி உள்ளனர். சேலம் ஏற்காட்டில் தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating