கள்ளக்காதலி வீட்டில் சிக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்டு!!

Read Time:1 Minute, 54 Second

9சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் மாதவன் (வயது 35). இவர் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவல் பிரிவில் போலீஸ்காரராக இருக்கிறார்.

இவருக்கும் வேலகவுண்டம்பட்டியை அடுத்த பொம்மம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. அடிக்கடி அந்தப்பெண் வீட்டுக்கு வந்து சென்றார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு அந்த பெண்ணின் வீட்டிற்கு மாதவன் சென்றார். இதை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் கிராம மக்கள் அவரை பிடித்து வேலக்கவுண்டம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விசாரணை நடத்தும்படி பரமத்தி வேலூர் டி.எஸ்.பி உதயகுமாருக்கு உத்தரவிட்டார். அவர் விசாரணை நடத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கை அனுப்பினார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆயுதப்படை போலீஸ்காரர் மாதவனை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சஸ்பெண்டு செய்தார்.

ஏற்கனவே கடந்த மாதம் வேலக்கவுணடம்பட்டியில் விபசார அழகியுடன் உல்லாசமாக இருந்த வேலக்கவுண்டம்பட்டி போலீஸ் ஏட்டு ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது ஆயுதப்படை போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வலிப்பு நோய்க்கு மந்திரவாதியிடம் சிகிச்சை: கர்ப்பிணி பெண் சாவு!!
Next post மணப்பாறை: சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்!!