கணவர் சிகிச்சை பெறும் ஆஸ்பத்திரி முன்பு பெண் தற்கொலை!!
சித்தூர் மாவட்டம் பலமநேரை சேர்ந்தவர் ரவீந்திரா. அவரது மனைவி ஜெயஸ்ரீ. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரவீந்திராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் திருப்பதி ருயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவீந்திராவின் 2 சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டதாகவும், தினமும் டயாலசிஸ் சிகிச்சை செய்தால்தான் அவர் உயிர் வாழ முடியும் என்றும் தெரிவித்தனர். அதைக்கேட்டு ஜெயஸ்ரீ அதிர்ச்சி அடைந்தார்.
கணவன் இறந்து விட்டால், தான் விதவைக்கோலம் அடைந்து விடுவோமே என்று வேதனைக்கு உள்ளானார். கணவர் சாவதற்கு முன்னதாகவே உயிரை மாய்த்துக் கொண்டு, சாகும்போதும் ‘சுமங்கலி’யாகவே செத்து விட வேண்டும் என்ற விபரீத முடிவை மேற்கொண்டார். அதன்படி, கணவன் சிகிச்சை பெற்று வந்த ருயா ஆஸ்பத்திரியின் வாசலில் வைத்து, அதிகப்படியான தூக்க மாத்திரைகளை விழுங்கினார்.
பின்னர் கணவன் பெயரை உச்சரித்தபடியே அதே இடத்தில் மயங்கி விழுந்தார். அதைக்கண்டு பதறிய அவரது உறவினர்கள், ஜெயஸ்ரீயை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அலிபிரி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சரேஷ்குமார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating