அசராமல் 26 முறை திருமணம் செய்துகொண்ட பெண்!!
அசராமல் 26 முறை திருமணம் செய்துகொண்டுள்ள சீனப் பெண் ஒருவர் புதிய சட்ட சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார். அவரது பிரச்சினை திருமண சட்டம் அல்ல. சீன அரசாங்கத்தின் குடும்ப கட்டுப்பாடு கொள்கைகளே இப்போது அவருக்கு புதிய தடையை உருவாக்கியுள்ளன.
ஜியாங்சு மாகாணத்தின் சுயாங் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 40 வயதுப் பெண்மணி சமீபத்தில் தான் முன்னாள் கணவர் மூலம் கருவுற்றிருப்பதைத் தெரிந்துகொண்டார். இதனால் தற்போதைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பழைய கணவரையே மறுமணம் செய்துகொண்டார்.
இந்தத் திருமணத்தைப் பதிவு செய்யப் போனபோதுதான் அந்தக் கணவருக்கு மற்றொரு பெண் மூலம் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. சீனாவில் சமீப காலம் வரை ´ஒரு குடும்பம் ஒரு குழந்தை´ என்ற கொள்கை தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
தற்போதுதான் இந்தக் கொள்கையை அரசு சிறிது தளர்த்தி இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் சட்டப்படி அந்தக் கணவர் மூன்றாவது குழந்தைக்குத் தந்தையாக முடியாது. இந்த சிக்கலைத் தீர்க்கும்பொருட்டு அந்தப் பெண் இவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய கணவரை மணந்து கொள்ள முடிவு செய்துள்ளாள்.
குழந்தையில்லாத அந்த மனிதனும் தான் ஒரு குழந்தைக்குத் தந்தையாகவிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இதுவரை 15 ஆண்களைத் திருமணம் செய்துள்ள இந்தப் பெண் அவர்களில் 9 பேரை மறுமணமும் செய்துகொண்டாராம்.
ஒருவரைத் திருமணம் செய்து குழந்தைகளை படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டுவரவே விழி பிதுங்கும் இந்த காலகட்டத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பலதார மணம் புரிந்த இந்தப் பெண்ணைப் பற்றிய தகவலே தலையை சுற்றவைப்பதாக இருக்கிறதல்லவா?
Average Rating