காதல் தகராறில் மோதல்: கொதிக்கும் பாலை ஊற்றியதில் 4 பேர் படுகாயம்!!
Read Time:1 Minute, 6 Second
சூளையை அடுத்த தட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்கும் ஏற்கனவே காதல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த தகராறில் கணேசன், அவரது அண்ணன் மாரிமுத்து ஆகியோரை கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் பாலு, தீபக்குமார், குமார், மணி ஆகியோர் தாக்கினர்.
இதனால் ஆவேசம் அடைந்த கணேசன் அருகில் உள்ள டீக்கடையில் இருந்த கொதிக்கும் பாலை கார்த்திக் தரப்பினர் மீது ஊற்றினார். இதில் பாலு, தீபக்குமார், குமார், மணி ஆகியோரது உடல் வெந்து அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
Average Rating