போளூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது!!
Read Time:1 Minute, 23 Second
போளூர் அடுத்த சி.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி கூலித்தொழிலாளி. இவர் சென்னையில் தங்கி குடும்பத்துடன் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அதே கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி 4–ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 10–ந் தேதி அன்று கரும்பு தோட்டத்தில் சிறுமி மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து (வயது50) (கூலித்தொழிலாளி) குடிபோதையில் சிறுமியிடம் கொய்யா பழம் தருவதாக நைசாக பேசி கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்து சிறுமி வீட்டுக்கு வந்து பாட்டியிடம் விபரம் கூறி அழுதார். இது குறித்து சிறுமியின் தாத்தா சின்னையன் போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மலர்கொடி வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தார்.
Average Rating