வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

Read Time:1 Minute, 36 Second

87b99867-68b7-4211-a4d1-4db60b86c49c_S_secvpfதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பலாசூரை சேர்ந்தவர் மயில். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 25). எம்.பில். படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் மோகன்ராஜ் (26). பி.இ. படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக புவனேஸ்வரியும், மோகன்ராஜுயும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு புவனேஸ்வரியின் வீட்டில் எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் கடந்த 9–ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். நேற்று முன்தினம் நாட்டறம்பள்ளியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்த இருவரும் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.

பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு வேப்பங்குப்பம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜி, பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பெற்றோருடன் செல்ல புவனேஸ்வரி மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து ஒடுகத்தூரில் உள்ள மோகன்ராஜின் நண்பர் வீட்டுக்கு இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீரங்கத்தில் மனைவியை எரித்து கொன்ற வழக்கில் கணவன் கைது!!
Next post ஜோடி சேர்வார்களா இவர்கள்..?