பண்ருட்டி: கணவன் வீடு முன்பு 2–வது நாளாக பெண் தர்ணா போராட்டம்!!

Read Time:1 Minute, 33 Second

a29a7f4f-7a42-4acd-a61e-cc7db3f5bffe_S_secvpfவிழுப்புரம் மாவட்டம் சிலுவை கிராமத்தை சேர்ந்தவர் சுலக்ஷணா (வயது 23). இவரது காதல் கணவர், பண்ருட்டியை அடுத்த கீழ்காவனூரை சேர்ந்த அன்பரசன் (25), தனியார் நிறுவன ஊழியர்.

கருத்து வேறுபாடு காரணமாக சுலக்ஷணாவுடன் சேர்ந்து வாழ அன்பரசன் மறுத்துவிட்டார். மேலும், விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். எனினும் தன்னுடன் சேர்ந்து வாழ கோரி கீழ்காவனூரில் உள்ள கணவன் வீட்டு முன்பு நேற்று சுலக்ஷணா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

உடனே அன்பரசன் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுவிட்டனர். இதனால் மனம் தளராமல் சுலக்ஷணா போராட்டத்தை தொடர்ந்தார். நேற்று தனது மாமியார் வீட்டு வாசலிலேயே அடுப்பை வைத்து சமைத்து சாப்பிட்டார். இரவில் அந்த வீட்டின் முன்பே படுத்து தூங்கினார்.

2–வது நாளாக இன்று சுலக்ஷணாவின் தர்ணா போராட்டம் தொடர்ந்தது. காதல் கணவன் தன்னுடன் சேர்ந்து வாழ கோரி இளம்பெண் நடத்தி வரும் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்ன புரியவில்லையா?
Next post 12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 75 வயது தாத்தா கைது!!