வேலூரில் மனைவி தீக்குளித்து சாவு: காப்பாற்ற முயன்ற கணவரும் பலி!!

Read Time:1 Minute, 45 Second

e54812a5-471f-402f-9a9b-afdb82055e48_S_secvpfவேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 30). பெயின்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (26). திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு ஸ்ரீமதி (6) என்ற மகளும், ஸ்ரீராம் (4) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் மனைவி நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. வழக்கம்போல கடந்த 10ந் தேதி மாலை இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த விஜயலட்சுமி, தனது உடல் மீது மண்எண்ணை ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவிய போது வலி தாங்காமல் கதறினார்.

அப்போது மனைவியை காப்பாற்ற சென்ற கணவரும் தீயில் சிக்கினார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து 2 பேரையும் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல்: கணவர் கைது!!
Next post மாணவிகளிடம் ஈவ்–டீசிங் ரெயில்வே அதிகாரி உள்பட 3 பேர் கைது!!