விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலேசிய ஏர்லைன்ஸ் ஊழியர்!!
Read Time:1 Minute, 22 Second
மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விமான ஊழியர் ஒருவர் பிரான்சில் இன்று பிடிபட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோலாலம்பூரில் இருந்து கடந்த 4-ம் தேதி பாரிஸ் சென்ற விமானத்தில் சென்ற பெண்ணிடம் அத்துமீறி நடந்ததாக வந்த புகாரையடுத்து அவரை பிடித்து விசாரித்து வருவதாக விமான நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
தங்கள் ஊழியர்களின் நடத்தை உயர்வாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட விமான நிறுவனம், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பிரான்ஸ் அதிகாரிகளின் விசாரணைக்கு உதவுவதாகவும் பயணிகளின் சவுகரியத்திற்கே முன்னுரிமை கெடுப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Average Rating