தாய்-தந்தையை இழந்து பாட்டியுடன் வசித்த வாலிபர் தற்கொலை!!
Read Time:1 Minute, 10 Second
சேலத் தாதகாப்பட்டி அருணாசலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 27). இவரது பெற்றோர் இறந்து விட்டனர். இதனால் அவர் பாட்டி லட்சுமி ( 70) பராமரிப்பில் வசித்தார். சில நாட்கள் வேலைக்கு செல்லும் இவர் பல நாட்கள் வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்தார்.
இன்று காலை இவரது பாட்டி ரேசன் கடையில் மண்எண்ணை வாங்க சென்று இருந்தார். அப்போது பாட்டி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மண்எண்ணை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்த பாட்டி பேரன் தூக்கு போட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating