ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசை வார்த்தை கூறி மாணவி கற்பழிப்பு: டிரைவர் கைது!!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள காடனேரி கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் ஜெயா (வயது17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்–1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி (18).
இவர் ஜெயா வீட்டில் டிராக்டர் டிரைவராக பணி புரிந்து வருகிறார். அப்போது ஜெயாவுக்கும், தங்க பாண்டிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
அப்போது தங்பாண்டி, ஜெயாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். அப்போது அவர்கள் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
பின்னர் ஜெயா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு தங்கபாண்டி மறுத்து விட்டதாக தெரிகிறது.
இது குறித்து நத்தம்பட்டி போலீசில் மாணவி புகார் செய்தார். அதில் ஆசை வார்த்தை கூறி வாலிபர் தங்கபாண்டி என்னை கற்பழித்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்த தங்க பாண்டியை கைது செய்தனர்.
Average Rating