காரைக்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்!!

Read Time:1 Minute, 30 Second

5e11520f-5029-4933-9466-7aa7c9c4d86e_S_secvpfகாரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மனிஷா (வயது19). இவர் பிளஸ்–2 படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து முத்து விடுமுறையில் சொந்த ஊர் வந்து இருந்தார்.

அவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனிஷாவுக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

நேற்று முத்து அவரது மனைவி ஆகியோர் குன்றக்குடி கோவிலுக்கு சென்றுவிட்டனர். வீட்டில் மனிஷா மட்டும் இருந்தார். மாலையில் முத்துவும், அவரது மனைவியும் வீடு திரும்பினர். அப்போது மனிஷாவை காணவில்லை.

இதனால் கவலை அடைந்த அவர்கள் மகளை பல இடங்களில் தேடினர். எங்கும் அவரை காணவில்லை. இதனை தொடர்ந்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் முத்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம்பெண் மனிஷாவை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏர்வாடி அருகே இளம்பெண் தற்கொலை!!
Next post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசை வார்த்தை கூறி மாணவி கற்பழிப்பு: டிரைவர் கைது!!