திருமணமானதை மறைத்து, காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை!!

Read Time:3 Minute, 42 Second

e5d04385-0b5e-4666-8d6d-a8a4db75c47b_S_secvpfஅருமனைதனிச்சவிளையை சேர்ந்த 25 வயது இளம்பெண், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தினமும் வீட்டில் இருந்து ஜவுளிக்கடைக்கு பஸ்சில் வேலைக்கு சென்று வந்தார். அப்போது இளம் பெண்ணுக்கும், சிதறால்கீரி தோப்புவிளையை சேர்ந்த சுரேஷ் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

சுரேசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் சுரேஷ் திருமணம் ஆனதை மறைத்து, இளம் பெண்ணிடம் பழகி வந்தார். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்தனர்.

இந்நிலையில் சுரேஷ், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 7.11.2007 அன்று சிதறால் பழைய தபால் நிலையம் அருகில் உள்ள செங்கல் சூளைக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். பின்னர் சுரேசிடம், இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது, அவர் திருமணத்துக்கு மறுத்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து பெண் வீட்டார் சுரேசைப் பற்றி விசாரித்த போது அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த இளம்பெண், இது குறித்து அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் இந்த வழக்கு நாகர்கோவில் விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி முத்துசாரதா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட சுரேசுக்கு சட்டப் பிரிவு 376வது (கற்பழிப்பு) பிரிவின் கீழ் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், 417வது (ஏமாற்றுதல்) பிரிவின் கீழ் 6 மாதம் ஜெயில் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர் ஆஜராகி வாதாடினார்.

நாகர்கோவில் விரைவு மகளிர் கோர்ட்டில் ஒரு வாரத்துக்கு முன்பு பெற்ற மகளை கற்பழித்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், 27 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு பரபரப்பு அடங்கு வதற்குள், இளம் பெண்ணை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகள்கள் பாலியல் பலாத்காரம்: தந்தைக்கு 15 ஆண்டு ஜெயில்!!
Next post ஏர்வாடி அருகே இளம்பெண் தற்கொலை!!