பழைய வண்ணாரப் பேட்டையில் மாணவனை அடித்ததாக ஆசிரியர் மீது போலீசில் புகார்!!
Read Time:54 Second
பழையவண்ணாரப் பேட்டை ராமானுஜம் கூடம் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரத். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் மீண்டும் பள்ளிக்கு சென்ற சரத்தை, தமிழ் ஆசிரியர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டது.
இது குறித்து சுப்பிரமணி, ராயபுரம் போலீசில் ஆசிரியர் மீது புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating