பெண்களை எளிதாக உஷார் செய்வது எப்படி?
பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த விஷால், ஆர்யா, விஜய் சேதுபதி என பலரும் சம்பளம் வாங்கவில்லை.
ஒவ்வொருவருக்கும் சில இலட்சங்களை கவரில் போட்டு பார்த்திபன் தந்தும், இதுக்கு சம்பளமா என்று அனைவரும் மறுத்துவிட்டனர்.
மறுத்தாலும் கொடுப்பதுதானே பண்பு.
சம்பளம் வாங்க மறுத்தவர்களுக்கு தனது ஸ்டைலில் பரிசுப் பொருள்கள் தந்தார் பார்த்திபன். யாருக்கு என்ன பரிசளித்தார் என்பது சஸ்பென்ஸ். நிகழ்ச்சியொன்றில் ஆர்யாவுக்கு தந்த பரிசு என்ன என்பது பற்றி மட்டும் கூறினார் பார்த்திபன்.
சம்பளம் வாங்காதவர்களுக்கு என்னால் முடிந்த பரிசு தந்தேன். அதில் ஆர்யாவுக்கு பெண்களை எளிதில் உஷார் செய்வது எப்படி என்ற புத்தகத்தை பரிசளித்து அவரை சந்தோஷப்படுத்தினேன் என்றார்.
உஷார் செய்வது குறித்து பத்து புத்தகம் போடக் கூடிய அனுபவம் ஆர்யாவுக்கு இருக்கிறது. அவருக்கே புத்தக பரிசா? இருட்டு கடையில் போய் அல்வா வித்திருக்கீங்களே பார்த்தி சார்.
Average Rating