புதுவையில் சினிமா நடிகர் மனைவி திடீர் மாயம்!!

Read Time:2 Minute, 18 Second

ffed076b-bdcd-480f-8020-542aff47caa9_S_secvpfசிதம்பரம் அருகே உள்ள மணலூரை சேர்ந்தவர் ராஜா என்கிற கராத்தே ராஜா. இவர் சினிமா நடிகர். போக்கிரி, சுறா உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் புதுவை சாரத்தை சேர்ந்த முருகன் மகள் திவ்யா (வயது 23) என்பவருக்கும் கடந்த 2008–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன.

இவர்கள் சாரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். சினிமா படப்பிடிப்பில் ராஜா மும்முரமாக இருப்பார். அதனால் நேரம் கிடைக்கும்போது மாதத்திற்கு ஒன்று அல்லது 2 முறை மட்டும் புதுவைக்கு வருவார். நடிகர் சரத்குமார் நடித்து வரும் ஒரு படத்தில் தற்போது முக்கிய வேடத்தில் ராஜா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கணவன்– மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 13–ந் தேதி திவ்யா தனது 3 குழந்தைகளையும் தனது தாயாரிடம் விட்டுவிட்டு மார்க்கெட் சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோரிமேடு போலீஸ் நிலையத்துக்கு ராஜா வந்தார். போலீசாரிடம் தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொண்டார். போலீசார் திவ்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஞ்சானில் மட்டும் ஏன் இவ்வளவு கிளாமர்? சமந்தா பதில்!!
Next post நாமக்கல் அருகே கிணற்றில் ஆண் பிணம்!!