போலீஸ் நிலையத்தில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை!!

Read Time:1 Minute, 28 Second

872b96f1-b3d1-4407-9891-405460291a91_S_secvpfமகாராஷ்ட்டிரம் மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள நாகாபூர் கிராமத்தை சேர்ந்தவர் துக்காராம் சம்பாஜி ஜோக்தண்ட்(25).

மோட்டார் சைக்கிள் திருட்டு புகார்கள் தொடர்பாக இவர்மீது சந்தேகப்பட்ட போலீசார், துக்காராமை அப்பகுதியில் உள்ள பார்லி சிட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் நேற்று மாலை அவர் பிணமாக தொங்கினார்.

எப்போதுமே போலீசாரின் நடமாட்டம் நிறைந்த அந்த வளாகத்தில் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொள்ள சாத்தியமில்லை என்பதால், போலீசாரே துக்காராமை அடித்துக் கொன்றுவிட்டு, மரத்தில் தொங்க விட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் நவீன்சந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உல்லாசம் அனுபவிப்பதை பார்க்க ஆசைப்பட்டு தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய பெண்!!
Next post ஊழல் பேர்வழிகளின் போட்டோக்களை பேஸ்புக்கில் போட லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு!!