குரோம்பேட்டையில் கொத்தனார் கொலை: குடிபோதையில் தம்பி ஆத்திரம்!!
குரோம்பேட்டை பாரதிபுரம் பெரியார்நகர் 4–வது தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜு பிள்ளை. இவருக்கு வேலு (40), குமார் (38) என்ற 2 மகன்கள். இருவரும் கொத்தனராக உள்ளனர். ஒரே வீட்டில் வசிக்கிறார்கள்.
இருவரும் அடிக்கடி குடித்து விட்டு தகராறு செய்வார்கள். இதேபோல் நேற்று மாலையில் குடிபோதையில் தகராறு செய்து கொண்டு இருந்தனர்.
இருதரப்பினர் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் இரவு இருவரும் தூங்க சென்றனர்.
காலையில் கோவிந்த ராஜு பிள்ளை எழுந்து பார்த்தபோது வீட்டில் வேலு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் அம்மி கல் குழவியால் தாக்கப்பட்ட காயம் இருந்தது. அதற்கேற்றார்போல் அருகில் கிடந்த அம்மிக்கல் குழவியில் ரத்தக்கரை படிந்திருந்தது.
வீட்டில் இருந்த தம்பி குமார் தலைமறைவாகி விட்டார். அவர்தான் அண்ணனை கொலை செய்து இருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating