வாடிப்பட்டி அருகே வாலிபர் கொலை: போலீசார் விசாரணை!!

Read Time:1 Minute, 55 Second

37330610-5ab9-4e8f-a40e-9af1931a0318_S_secvpfமதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ளது தாதம்பட்டி. மதுரை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரின் கண்மாய் அருகே புளியந்தோப்பு ஒன்றும் உள்ளது.
இங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை அங்கு சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், குற்றவியல் சப்–இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன. அவர் காலையில் நடைபயிற்சி செல்லும் உடை அணிந்து இருப்பதால் அவரை யாராவது கடத்தி வந்து இங்கு வைத்து கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம்? அல்லது ஏதாவது காரணம் சொல்லி அழைத்து வந்து கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட வாலிபர் அணிந்திருந்த சட்டையில், ‘‘சன் டெய்லர்’’ திண்டுக்கல்–5 என்ற டெய்லர் முகவரி உள்ளது. இதனால் அவர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர் யார்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவு சரியில்லை என தகராறு செய்தவருக்கு கத்தரிக்கோல் குத்து: மேனேஜர் தப்பி ஓட்டம்!!
Next post குரோம்பேட்டையில் கொத்தனார் கொலை: குடிபோதையில் தம்பி ஆத்திரம்!!