உணவு சரியில்லை என தகராறு செய்தவருக்கு கத்தரிக்கோல் குத்து: மேனேஜர் தப்பி ஓட்டம்!!
Read Time:1 Minute, 20 Second
நீலாங்கரை பாலவாக்கத்தில் ஒரு தனியார் ஆண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் மேனேஜராகவும், முத்து கிருஷ்ணன் வார்டனாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த விடுதியில் தமிம் அன்சாரி உள்பட 30 பேர் தங்கி உள்ளனர். நேற்று இரவு உணவு சரியில்லை என்று தமிம் அன்சாரி வார்டன் முத்துகிருஷ்ணனிடம் தகராறு செய்தார். முத்து கிருஷ்ணனுக்கு ஆதரவாக கார்த்திக் வந்தார். கார்த்திக்கை திட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் கத்தரிக்கோலால் தமிம்அன்சாரியின் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.
தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசார் விரைந்து சென்று தமிம்அன்சாரியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பி ஓடிய கார்த்திக்கை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating