நடத்தையில் சந்தேகம்: கர்ப்பிணி மனைவியை குத்திக்கொன்ற கணவன்!!

Read Time:2 Minute, 4 Second

98065ae4-ad8f-4f54-9db5-82d09585ca3a_S_secvpfதேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது29).கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கூடலூரை சேர்ந்த தர்மர் மகள் பிரேமா(21) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது பிரேமா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் ஆடி மாதத்திற்காக பிரேமாவை அவரது பெற்றோர் கூடலூருக்கு அழைத்து சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரேமாவை பால்பாண்டி தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இவரது வீட்டின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டில் எட்டிப்பார்த்தபோது பிரேமா ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு அவர்கள் தெரிவித்தனர். சப்–இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரோமாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பால்பாண்டி தனது மனைவியை கத்தியால் பல இடங்களில் குத்தி கொன்று விட்டு தலைமறைவாகி இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான பால்பாண்டியை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவட்டாரில் கணவன் வீடு முன்பு கைக்குழந்தையுடன் இளம்பெண் 2–வது நாளாக தர்ணா போராட்டம்!!
Next post உணவு சரியில்லை என தகராறு செய்தவருக்கு கத்தரிக்கோல் குத்து: மேனேஜர் தப்பி ஓட்டம்!!