கடத்தி சென்ற யாஸிதி இளம்பெண்களை மதம் மாற்றி திருமணம்: ஐ.எஸ். போராளிகள் ஏற்பாடு!!

Read Time:1 Minute, 51 Second

7d237b33-ddeb-4f94-9fae-e18832d2f54d_S_secvpfபாக்தாத்துக்கு அடுத்தபடியாக ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் மொசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ். எனப்படும் ஜிஹாதி போராளிகள் அப்பகுதியினை இஸ்லாமிய ஆட்சி முறைக்குட்பட்ட தனிநாடாக அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஈராக்கின் பல்வேறு பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, குர்திஷ் படைகளுடன் ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வந்த ஜிஹாதி படையினர், சிரியா-ஈராக் எல்லைப் பகுதியில் மோசூலை ஒட்டியுள்ள சிஞ்சார் நகரையும் கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர்.

சிஞ்சார் நகரில் ஸொராஸ்ட்டிரிய கோட்பாடுகளை பின்பற்றி வாழும் யாஸிதி இனத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களை கடத்திச் சென்ற ஐ.எஸ்.படையினர், இளம்வயதுடைய அழகிய பெண்களை தனியாக பிரித்து, அவர்களை மத மாற்றம் செய்து, திருமணம் செய்துக் கொள்ளும் ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக ஈராக்கில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலவச நிலம், வீடு, வசதியான வாழ்க்கை என்ற வாக்குறுதிகளின் மூலம், வயது முதிர்ந்த பெண்களையும் மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்யவும் அவர்கள் முயன்று வருவதாகவும் ஒரு செய்தி குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செயற்கை மார்பகங்களுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண்!!
Next post இரண்டாம் உலகப்போரில் கட்டாய விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கொரியப் பெண்கள் போப்பை சந்திக்கிறார்கள்!!