மீன்பிடிக்க வந்த சிறுவனை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர் கைது!!

Read Time:1 Minute, 18 Second

2075896437Untitled-1திருகோணமலை – குச்சவெளி – கல்லறாவ பகுதியில் 12 வயது சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக கூறப்படும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றுக்கு அமைய சந்தேகநபரை நேற்று மாலை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடிக்காக வெளி மாவட்டத்திலிருந்து கல்லாற பகுதிக்கு சென்றிருந்த சிறுவனை சந்தேகநபர் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சித்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமேஸ்வரி (விமர்சனம்)!!
Next post காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம் ?