மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா?
பல்லாவரத்தில் உள்ள புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் வதந்தி கிளம்பியது.
இதை தொடர்ந்து பள்ளி முன்பு மாணவிகளின் பெற்றோர் முற்றுகை – மறியல் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே பள்ளியில் கொலையுண்டதாக குறிப்பிட்ட மாணவியின் புகைப்படம், பெயர் விபரங்களை பேஸ்புக், வாட்ஸ் அப்பில் வெளியிட்டு மீண்டும் வதந்தி பரவியது.
பொலிஸ் நடத்திய விசாரணையில் அந்த மாணவி மடிப்பாக்கத்தில் படித்து வருவது தெரிய வந்தது. இதனால் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நேற்று பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இன்று காலை வழக்கம் போல் பள்ளி செயல்பட்டது மாணவிகள் அனைவரும் வழக்கம் போல் வந்தனர்.
பாதுகாப்புக்காக பள்ளி முன்பு 20–க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். வதந்தி பரப்புபவர்களை கண்காணிக்க பள்ளி நுழைவு வாயில் அருகே 2 கண்காணிப்பு காமிராக்களை பொலிஸார் பொருத்தி இருக்கிறார்கள்.
மாணவிகள் சேர்க்கைக்கு சிபாரிசை ஏற்காததால் பள்ளிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக அரசியல் பிரமுகர்கள் சிலர் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வதந்தி பரப்பியதாக பல்லாவரத்தை சேர்ந்த 3 பேரை பொலிஸார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது.
Average Rating