கள்ளிக்குடி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் கடத்தல்!!

Read Time:1 Minute, 33 Second

4204ac69-7349-4e3e-86ec-97c9bd643bc7_S_secvpfமதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கே.வெள்ளாகுளத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது35), கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேணுகாதேவி (33). இவர்களுக்கு கவுரி (7), கவுசி (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 8–ந்தேதி சரவணகுமார் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் ரேணுகா தேவி, குழந்தை கவுரி, கவுசி ஆகியோரை காணவில்லை. இதனால் கவலை அடைந்த சரவணகுமார் மனைவி மற்றும் குழந்தைகளை தேடினார். எங்கும் அவர்களை காணவில்லை. வீட்டின் பீரோவில் இருந்த 14 பவுன் நகை, ரூ.4,500 ஆகியவற்றை காணவில்லை.

இதுகுறித்து கள்ளிக்குடி போலீசில் சரவணகுமார் புகார் செய்துள்ளார். அதில் விருதுநகர் மாவட்டம் அய்யனார்புரத்தைச் சேர்ந்த சவுந்தர் என்பவர் எனது மனைவி ரேணுகாதேவி மற்றும் குழந்தைகள் கவுரி, கவுசி ஆகியோரை கடத்தி சென்று விட்டார். அவர்களை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவர், மாமியார் கொடுமை: கருணை கொலை செய்ய வேண்டி கலெக்டரிடம் பெண் மனு!!
Next post பாலியல் குற்றச்சாட்டு – 278 வருட தண்டனை – டாக்டர் கைது!!