கணவர், மாமியார் கொடுமை: கருணை கொலை செய்ய வேண்டி கலெக்டரிடம் பெண் மனு!!
வேலூர் அருகே உள்ள சின்னபாலம்பாக்கம் கொல்லைமேட்டை சேர்ந்த இளம்பெண் சோபாவதி (வயது 32) என்பவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
எனக்கும் தேவேந்திரன் என்பவருக்கும் கடந்த 2001–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது 25 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக வழங்கப்பட்டது. 2 மகன்கள் உள்ளனர். திருமணமான நாள் முதல் எனது கணவர் தினமும் மதுஅருந்திவிட்டு வந்து அடித்து துன்புறுத்துகிறார். அதற்கு மாமனார் வரதராஜ், மாமியார் கனகா, மைத்துனர் ராஜி ஆகியோர் உடந்தையாக உள்ளனர். மேலும் எனது கணவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.
எனது கணவர் டிரைவராக இருப்பதால் வேனை ஏற்றி என்னை கொலைசெய்து விடுவேன் என்று மிரட்டுகிறார். பலமுறை என்னை கொல்ல முயற்சி செய்துள்ளார்.
எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது என்னை கருணை கொலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating