ஆறு வயது தங்கையை குத்திக் கொன்ற 13 வயது அக்காள் கைது!!
படல்குபுர பகுதியில் ஆறு வயது தங்கையை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் தாக்குதலுக்கு இலக்கான பதிலா பானு எனப்படும் அவரது தங்கை படல்குபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
மொனராகலை – படல்குபுர பிரதேச வீடொன்றிலுள்ள அக்கா – தங்கை இருவருக்குள்ளும் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்குக் காரணம் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மரத்தில் இருந்து விழுந்ததாக கூறியே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் சந்தேகநபரான 13 வயது சிறுமி கைதுசெய்யபட்டு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, “சம்பவம் இடம்பெற்ற வேளை தனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating