காதல் திருமணம் செய்த பெண் வேறொரு வாலிபரை மணந்தார்: கணவர் போலீசில் புகார்!!
கொளத்தூரை சேர்ந்தவர் விஜயகுமார் (32). மைலாப்பூர் ஆழ்வார் திருநகரை சேர்ந்தவர் கவிதா (28). 2 பேரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். இவர்கள் 2 பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த போது காதலித்தனர். காதலுக்கு கவிதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் 2 பேரும் 2012–ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வேலைக்காக வெளி நாட்டுக்கு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் கவிதா தனது தாய் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் கவிதாவும், விஜயகுமாரும் போனில் பேசி வந்தனர்.
கடந்த சில நாட்களாக கவிதாவுக்கு விஜயகுமார் போன் செய்தால் எடுப்பது இல்லை. போன் சிட்ச் ஆப் ஆனது. இதனால் சந்தேகம் அடைந்த விஜயகுமார் உடனே ஊர் திரும்பினார். கவிதா வீட்டிற்கு சென்று அவரை பார்க்க முயன்றார்.
அப்போது கவிதாவுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து விஜயகுமார் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கவிதா மேல் வழக்கு பதிவு செய்தனர்.
இதற்கிடையே கவிதா தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கீழ்ப்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating