சுந்தராபுரம் அருகே 10 வயது மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்!!

Read Time:2 Minute, 40 Second

c6bdd94f-3188-43d7-9faa-cfd0958761a6_S_secvpfகோவை சுந்தராபுத்தை அடுத்த பிள்ளையார்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகள் லட்சுமி(வயது 10, பெயர் மாற்றப்பட்டுள்ளது). போத்தனூரில் உள்ள பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார். லட்சுமியின் தாயார் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் துப்புரவு ஊழியராக உள்ளார்.

மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பிரகாஷ்(28). பெயிண்டராக வேலைபார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு லட்சுமியின் தாயார் இரவுப்பணிக்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் லட்சுமியின் தந்தையும், பிரகாஷூம் சேர்ந்து வீட்டின் அருகே அமர்ந்து மது குடித்தனர். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை அங்கிருந்து வெளியே சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட பிரகாஷ் நைசாக மாணவியின் வீட்டுக்குள் புகுந்தார். அங்கு தூங்கிக்கொண்டிருந்த மாணவியிடம் சில்மிஷம் செய்ததோடு பாலியல் பாலாத்காரம் செய்ய முயன்றார்.

திடுக்கிட்டு விழித்த மாணவி தன் எதிரே போதையில் பிரகாஷ் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ‘என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டார். அவரது அபயக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் ஓடி வருவதைப் பார்த்த பிரகாஷ் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்தார். பின்னர் தனது மகளை அழைத்துக்கொண்டு போத்தனூர் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு பிரகாஷ் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்று புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரகாசை தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்மை பரிசோதனைக்கு தயங்குவது ஏன்?
Next post காதல் திருமணம் செய்த பெண் வேறொரு வாலிபரை மணந்தார்: கணவர் போலீசில் புகார்!!