இளம்பெண்ணை கடத்திய வாலிபர் மீது புகார்!!
Read Time:1 Minute, 11 Second
பழனிதாலுகா பாலசமுத்திரத்தை சேர்ந்த தாஜூதீன் மகள் சர்மிளாபானு(வயது20). இவர் 7–ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவரும் வடக்குதெருவை சேர்ந்த கருப்புசாமி என்ற வாலிபரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விபரம் சர்மிளாபானுவின் பெற்றோருக்கு தெரியவே அவர்கள் கண்டித்தனர்.
இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். சம்பவத்தன்று கடைக்கு சென்றுவருவதாக கூறிச் சென்ற சர்மிளா மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் பெற்றோர் விசாரித்து பார்த்ததில் கருப்புசாமி கடத்திச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பழனி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Average Rating