வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது!!

Read Time:1 Minute, 38 Second

948d408d-0846-4fe9-84d8-38ab1fe4ea9c_S_secvpfபள்ளிப்பட்டு அருகே உள்ள கே.பி.என் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் முரளி. வட்டார வளர்ச்சி அலுவலக டிரைவர்.

இவரது வீட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் பழுது ஏற்பட்டது. இதனால் வீட்டில் மின்சாரம் இல்லை.

இதுகுறித்து அம்மையார் குப்பம் மின்சார அலுவலகத்தில் முரளி புகார் செய்தார். இதையடுத்து சிவா (48) என்ற மின் ஊழியர் மின் இணைப்பு பழுதை சரி செய்வதற்காக கே.பி.என். கண்டிகை சென்றார்.

மின் ஊழியர் சிவா சென்ற போது, முரளி வீட்டில் முரளியின் மனைவி தீபா (24) தனியாக இருந்தார். மின்சார பழுதை சரி செய்ய வந்திருப்பதாக கூறிய சிவா அவரிடம் பேச்சு கொடுத்தார்.

அப்போது தனிமையை பயன்படுத்தி தீபாவிடம் மின் ஊழியர் சிவா தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் தீபா கூச்சலிட்டார்.

உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். தப்ப முயன்ற சிவாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, மின் வாரிய ஊழியர் சிவாவை ஆர்.கே. பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆறு வயது தங்கையை குத்திக் கொன்ற 13 வயது அக்காள் கைது!!
Next post அருப்புக்கோட்டை அருகே பாலிடெக்னிக் மாணவி கற்பழிப்பு!!