வீட்டில் அடைத்து உல்லாசம்: மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை கைது!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள் மலையை சேர்ந்தவர் சின்னச்சாமி கூலித்தொழிலாளி. அவரது மனைவி துர்காதேவி.
இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் ப்ரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது வயது15). அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். இதற்கிடையே கணவன்–மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
எனவே துர்காதேவி மூத்தமகள் ப்ரியாவை தவிர மற்ற 3 பேரையும் தாய் வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்றும் பிரச்சினை ஏற்பட்டது.
துர்காதேவி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது ப்ரியா வீட்டில் தனியாக இருந்தார். இரவு நேரம் வீட்டிற்கு வந்த சின்னச்சாமிக்கு காமம் தலைக்கேறியது. பெத்த மகள் என்றுகூட பாராமல் ப்ரியாவை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதேபோல பலமுறை ப்ரியாவிடம் உல்லாசம் அனுபவித்ததில் தற்போது அவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
நேற்று ப்ரியாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. நடந்த விபரத்தை தாய் துர்காதேவி கேட்டறிந்தபோது இந்த அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது.
ஆத்திரமடைந்த துர்காதேவி தன் மகளுடன் கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா ஆகியோர் வழக்கு பதிவு செய்து சின்னச்சாமியை கைது செய்தனர்.
Average Rating