போலீசாக நடித்து வாகன ஓட்டிகளை மடக்கி பணம்!!
மாமியார் பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதி தர கூறி மாமியாரின் தாயாரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதே நபர் சமீபத்தில் போலீசாக நடித்து வாகன ஓட்டிகளை மடக்கி பணம் வாங்கியதில் வேலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
போளூர் அடுத்த பெலாசூர் கிராமத்தில் வசிப்பவர் ஆண்டாள் (வயது 70). இவருக்கு மகன் இல்லை. மகள் ராஜேஸ் வரியின் மகளான பேத்தி உமா விற்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் டிரைவர் விசுவநாதனுக்கும் (29) 6 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. ஆனால் 1 வருடமாக பிரிந்து வாழ்கின்றனர்.
இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆண்டாள் சொத்து முழுவதும் மகள் ராஜேஸ்வரிக்கு எழுதி உள்ளார். இந்த நிலையில் மாமியார் ராஜேஸ்வரி பெயரில் உள்ள சொத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு பாட்டி ஆண்டாளை தாக்கியதோடு கொலை செய்து விடுவேன் என்றும் விசுவநாதன் மிரட்டி உள்ளார்.
படுகாயம் அடைந்த ஆண்டாள் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து விசுவநாதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் 16–ந் தேதி நடந்தது. மறுநாள் 17–ந்தேதி அன்று பாட்டி ஆண்டாளை பார்க்க விஸ்வநாதன் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு போலீசாக நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்த போது போலீசில் விசுவநாதன் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
Average Rating