பெங்களூர் அரசு விடுதியில் சிறுவனை அடித்து டாய்லெட்டை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய கொடுமை !!

Read Time:2 Minute, 13 Second

c9de6a22-673c-477c-ada2-ac4ec086a944_S_secvpfபெங்களூரில் உள்ள ஒரு அரசு விடுதியில் 13 வயது சிறுவனை பிளாஸ்டிக் பைப்பால் அடித்து சித்ரவதை செய்ததுடன், டாய்லெட் மற்றும் சமையலறையை சுத்தம் செய்யும்படி கட்டாயப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதி ஊழியர்கள் தாக்கியதால் கை கால்களில் காயமடைந்த அந்த சிறுவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் அந்த சிறுவன் காத்திருந்தான். அப்போது அங்கு வந்த 3 நபர்கள் அவனை பிடித்து வீடற்ற மற்றும் வீட்டை விட்டு ஓடிப்போன சிறுவர்களுக்காக தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்படும் விடுதிக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து அரசு விடுதிக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள பொறுப்பாளர் அந்த சிறுவனை விடுதி பொறுப்பாளர் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

சிறுவன் தனக்கு குடும்பம் மற்றும் வீடு உள்ளது என்பதை விவரிக்க முயன்றும் அவர்கள் விடவில்லை. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளேயே முட்டி போட்டு தவழ்ந்து வரும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். பிளாஸ்டிக் பைப்பால் அடித்துள்ளனர். மேலும் டாய்லெட் மற்றும் சமையல் அறையை சுத்தம் செய்யும்படி கூறியுள்ளனர்.

இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூத்த போலீஸ் அதிகாரி சந்தீப் பாட்டீல் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீசாக நடித்து வாகன ஓட்டிகளை மடக்கி பணம்!!
Next post இனி சினிமா வேண்டாம் – GOOD BYE!!