கான்பூர் உயிரியல் பூங்காவிற்குள் சிறுமி கற்பழிப்பு: 2 பேர் கைது!!
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள உயிரியல் பூங்காவில் சிறுமியை கற்பழித்த 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பூங்காவில் பணியாற்றும் பெண் பணியாளர் ஒருவரின் 14 வயது மகள் நேற்று பூங்கா வளாகத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது சுத்தம் செய்யும் பணியாளர் ராமு என்ற ராம் குமார் சிங், அவரிடம் நைசாக பேச்சு கொடுத்து காலியாக இருந்த ஒரு கூண்டுக்குள் வரும்படி அழைத்துள்ளார்.
உள்ளே போக தயங்கிய அந்த சிறுமியிடம், உள்ளே வந்தால் பழங்கள் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார். இதை நம்பி உள்ளே சென்ற சிறுமியை கற்பழித்துள்ளார். அந்த சிறுமியின் அழுகை சத்தம் கேட்டு அவரது தாய் மற்றும் சக ஊழியர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் ராமு தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ராமுவுக்கு பூங்கா பராமரிப்பாளர் தேவேந்திர சிங் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இருவரும் இன்று கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Average Rating