டெல்லியில் 100 சிறுமிகளை ஏமாற்றி விற்பனை: போலி சாமியார் கைது!!

Read Time:2 Minute, 35 Second

60d127f0-a912-42fb-bdc0-dceb3c67584c_S_secvpfடெல்லியில் பாலியல் தொழில் மற்றும் வீட்டு வேலைக்காக சிறுமிகள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி மாநில கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இது பற்றி விசாரணையில் இறங்கினார்கள்.
அப்போது பாபா பாம்தேவ் என்பவர் தலைமையிலான ஒரு கும்பல் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. 35 வயதாகும் பாபா பாம்தேவ் சாமியார் போல் வேடமிட்டு மக்களை ஏமாற்றி வந்துள்ளார். தன்னைத் தானே சாமியார் என்று அறிவித்துக் கொண்டார்.

அவரது சீடர்கள் என்ற பெயரில் அடியாட்கள் செயல்பட்டு வந்தனர். இவர்களுக்கும் வட மாநிலங்களில் செயல்படும் சிறுமிகள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உண்டு. அவர்கள் மூலம் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் படிக்காத சிறுமிகளை வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி டெல்லிக்கு கடத்தி வருவார்கள்.

டெல்லியில் பல்வேறு இடங்களுக்கு சிறுமிகளை விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு டெல்லிக்கு கடத்தி வரப்பட்டு பல்வேறு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு உள்ளனர்.

போலி சாமியாரிடம் இருந்து சிலர் சிறுமிகளை விலைக்கு வாங்கி விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் பலரை டெல்லியில் பல்வேறு இடங்களில் வீட்டு வேலைக்கு அனுப்பி வைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.

இது பற்றிய முழு விரங்களையும் அறிந்த கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதற்கான ஆதாரங்களையும் திரட்டி சாமியார் பாபா பாம்தேவையும் அவரது கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமிகளை மீட்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூரில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 3 பேர் கும்பல்!!
Next post பெங்களூரில் கற்பழிப்பு கும்பலிடம் இருந்து தப்பி ஒரு கி.மீ. தூரம் ஓடிவந்து புகார் அளித்த பெண்!!