பெங்களூரில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 3 பேர் கும்பல்!!

Read Time:2 Minute, 12 Second

dcdd9af8-2a09-4338-abdc-6754d2201b1f_S_secvpfபெங்களூர் மெஜஸ்டிக் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண், காய்கறி போன்ற பொருட்களை பெங்களூர் புறநகர் பகுதியில் தெருத் தெருவாக சென்று விற்பனை செய்து வந்தார்.

வழக்கம் போல் நேற்று முன்தினம் அவர் வியாபாரம் முடிந்து பஸ்சுக்காக காத்து இருந்தார். அப்போது ஒரு கார் அவர் அருகில் வந்து நின்றது. அதில் இருந்த வாலிபர் அந்தப் பெண்ணிடம் எங்கே போக வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் மெஜஸ்டிக் போக வேண்டும் நீண்ட நேரமாகியும் பஸ் வரவில்லை என்றார்.

உடனே அந்த வாலிபர் நானும் மெஜஸ்டிக்தான் போகிறேன் உன்னை அங்கே இறக்கி விடுகிறேன் என்று கூறி லிப்ட் கொடுத்தார். இதை நம்பி காரில் ஏறிய அந்தப் பெண்ணை மெஜஸ்டிக் பகுதிக்கு கொண்டு செல்லாமல் நண்பரின் பண்ணை வீட்டுக்கு கடத்திச் சென்றார்.

அங்கு அந்த வாலிபரும் அவரது 2 நண்பர்களும் அவளை மிருகத்தனமாக கற்பழித்தனர். பின்னர் வேறொரு இடத்தில் இறக்கி விட்டு தப்பிவிட்டனர். தட்டுத்தடுமாறி நடந்து சென்று அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார்.

அந்தப் பெண் தெரிவித்த வாலிபரின் அடையாளம், கார் எண்ணை வைத்து கற்பழிப்பில் ஈடுபட்டது அருண்குமார் கவுடா (24) மற்றும் அவரது நண்பர்கள் என தெரிய வந்தது.

அருண்குமாரின் தந்தை பெங்களூர் பால் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். கற்பழிப்பில் ஈடுபட்ட 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்தர பிரதேசத்தில் தலித் பெண் பலாத்காரம்: 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!
Next post டெல்லியில் 100 சிறுமிகளை ஏமாற்றி விற்பனை: போலி சாமியார் கைது!!