உத்தர பிரதேசத்தில் தலித் பெண் பலாத்காரம்: 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!!
உத்தர பிரதேச மாநிலம் பரேய்லியில் தலித் பெண்ணை 10 பேர் சேர்ந்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க தலித் பெண், தனது கணவர் மற்றும் மகனுடன் வயலில் வேலை செய்துவிட்டு நேற்று இரவு வீட்டிற்குத் திரும்பிக்காண்டிருந்தார். கண்டோன்மென்ட் பகுதியில் சென்றபோது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த 10 பேர் கொண்ட கும்பல் திடீரென அவர்களை சுற்றி வளைத்து தாக்கியது.
பின்னர் கணவன் மற்றும் மகனைக் கட்டிப்போட்டுவிட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை மருத்துவ பரிசோதனை அறிக்கையும் உறுதி செய்தது. இதையடுத்து 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு ரவீந்திர கவுட் தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Average Rating