பெண் கொலை வழக்குச் சந்தேகநபர் சிறைச்சாலை கழிவறையில் தற்கொலை!!
Read Time:53 Second
பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று அதிகாலை சிறைச்சாலை கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் ஹிருரான்கொட பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டவர் எனக் குறிப்பிடத்தக்கது.
இவரது வயது 35.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Average Rating