டெல்லி ஓட்டலில் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இசையமைப்பாளர்!!
புதுடெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் இளம் நடிகைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இசையமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் 27 வயதான அந்த நடிகை, தனது புதிய படம் தொடர்பான பணிகளை கவனிப்பதற்காக டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். வியாழக்கிழமை காலையில் அவரது அறைக்கு இசையமைப்பாளரான அங்கூர் ஷர்மா வந்தார். புதிய படத்தின் ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடர்பாக இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, தனியாக இருந்த நடிகையிடம் அவர் சில்மிஷம் செய்து தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
தன்னை காப்பாற்றும்படி நடிகை கூச்சலிட்டதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் வந்து இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டனர். நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அங்கூர் ஷர்மாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ர்டில் ஆஜர்படுத்தி திகார் சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ள போலீசார், அந்த ஓட்டலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவரின் டிஎன்ஏ மாதிரியை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு சாட்சியாக சேர்க்கப்படலாம் என தெரிகிறது
Average Rating