15 வயது சிறுமியைக் கடத்தி குடும்பம் நடத்தியவர் கைது!!

Read Time:1 Minute, 40 Second

3380786Untitled-115 வயது சிறுமியைக் கடத்தி அவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் ஒருவரை ஆணமடு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஆணமடு – தலுவேகம பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாயார் வௌிநாட்டில் பணி புரிவதால், அவர் பாட்டி வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக சிறுமியைக் காணவில்லை என பாட்டியார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியையும் குறித்த இளைஞரையும் சிலாபம் பகுதி வீடொன்றில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இளைஞரைத் தான் காதலித்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத சமயம் அவர் முதன் முதலில் தன்னுடன் உறவு கொண்டதாகவும் சிறுமி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் காதலனின் கோரிக்கைக்கு இணங்க வீட்டை விட்டு அவருடன் சென்றதாகவும் சிறுமி மேலும் குறிப்பிள்ளார்.

தற்போது சிறுமி வைத்தியப் பரிசோதனைகளுக்காக ஆணமடு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாலி கட்ட மறந்து மேடையில் குத்தாட்டம் போட்ட மணமகன்!!
Next post ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர் கைது!!