பிரபல நடிகை பிணையில் செல்ல அனுமதி!!
Read Time:1 Minute, 18 Second
கர்நாடக மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் ராய்ச்சூர் தொகுதியில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நடிகை பூஜாகாந்தி போட்டியிட்டார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, அனுமதி பெறாத வாகனத்தை பயன்படுத்தியதாக பூஜாகாந்தி மீது பொலிசில் வழக்கு பதிவானது.
இதுதொடர்பான வழக்கு ராய்ச்சூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதல் வகுப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி பூஜாகாந்திக்கு 2 தடவை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். ஆனாலும், பூஜாகாந்தி ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2–ம் திகதி பூஜாகாந்திக்கு பிடியாணை பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட்டில் பூஜாகாந்தி ஆஜர் ஆனார். அப்போது அவருக்கு பிணை வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
Average Rating