ஏற்காட்டில் காதலியுடன் விஷம் குடித்த காதலனும் சாவு!!
Read Time:1 Minute, 12 Second
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காட்டூரை சேர்ந்தவர் செந்தில்குமார் . திருமணம் ஆனவர். இவரும், ஈரோடு காளிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்த ரம்யாவும் நெருங்கி பழகி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு இவர்கள் ஏற்காடு வந்தனர். பின்னர் இவர்கள் விஷம் குடித்து ரோட்டில் மயங்கி விழுந்து கிடந்தனர்.
இவர்களை பார்த்த பொதுமக்கள் ஏற்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனே போலீசார் சம்பவ இடம் வந்து இரண்டு பேரையும் தூக்கி சென்று ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு ரம்யா இறந்து விட்டார். செந்தில்குமார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இங்கு அவர் நேற்று இறந்து விட்டார். இவரது உடலை ஏற்காடு போலீசார் மீட்டு விசாரித்து வருகிறார்கள்.
Average Rating