வீட்டில் உள்ள மின்இணைப்பு தொடர்பாக தகராறு: அண்ணி காதை கடித்து துப்பிய வாலிபர்!!

Read Time:2 Minute, 21 Second

7f9d1b8f-e50c-4832-b162-9d133e03887b_S_secvpfகோபி அருகே உள்ள கே. மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயி. இவரது தம்பி குருசாமி(வயது 31). இவர் தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதியாக உள்ளார். அண்ணன்–தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

வீட்டில் உள்ள மின் இணைப்பு தொடர்பாக சகோதரர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்ததாக தொகிறது.

இந்த நிலையில் குப்புசாமி மனைவி பார்வதி வீட்டில் மின்சார மெயின் சுவிட்சை அழுத்தியுள்ளார். அண்ணி சுவிட்ச் போடுவதை கண்ட குருசாமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே ஆவேசமாக கத்தியபடியே அண்ணியின் இடது பக்க காதினை கடித்தார். கடுங்கோபத்துடன் கடித்தால் காதின் ஒரு பாகம் துண்டாகி குருசாமியின் வாய்க்குள் வந்தது. பின்னர் அவர் கடித்த காதினை துப்பி விட்டு ஓட்டம் பிடித்தார்.

வலியால் துடித்த பார்வதி அலறி துடித்தார். உறவினர்கள் துண்டிக்கப்பட்ட காதின் பகுதியை ஒரு பாலித்தீன் கவரில் போட்டு கட்டினர். பின்னர் பார்வதியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் துண்டிக்கப்பட்ட காதினை ஒட்டி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சிறுவலூர் போலீசார் அண்ணின் காதினை கடித்து துப்பிய குருசாமியை கைது செய்தனர். பின்னர் கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கோபி ஜெயிலில் அடைக்கப்பட்டார். மின் இணைப்பு தகராறில் அண்ணியின் காதினை கொழுந்தன் கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஞ்சானுக்காக கொடுக்கப்பட்ட இலஞ்சம் இதுதான்!
Next post ஏற்காட்டில் காதலியுடன் விஷம் குடித்த காதலனும் சாவு!!