கள்ளக்காதலியுடன் ஓட்டலில் ஜாலியாக இருந்த கணவரை போலீசில் போட்டுக்கொடுத்த கவுன்சிலர்!!
Read Time:1 Minute, 19 Second
உத்தரப்பிரதேசம் மாநிலம், பத்தேபூர் மாவட்ட ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராக பதவி வகிப்பவர், சுதா பட்டேல்.
பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இவரது நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்த கணவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தகுந்த சமயத்தை எதிர்நோக்கி காத்திருந்த சுதாவுக்கு அவரது கணவர் வேறொரு பெண்ணுடன் அடிக்கடி ஓட்டலில் அறை எடுத்து தங்கி வருவது தெரிய வந்தது.
நேற்றும், கான்பூரில் உள்ள குறிப்பிட்ட ஒரு ஓட்டலில் அந்தப் பெண்ணுடன் அவர் ஜாலியாக இருப்பதாக கேள்விப்பட்ட சுதா பட்டேல், உடனடியாக போலீசாருடன் அந்த ஓட்டலுக்குச் சென்று, அறையின் கதவை தட்டி, கணவருடன் தகராறு செய்தார்.
உடன் சென்ற போலீசார் அவரது கனவர் சுரேஷ் பட்டேலை கைது செய்து, குற்றவியல் சட்டப்பிரிவு 498, 506, 151 ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Average Rating