பள்ளியில் ஆடையை அவிழ்த்து தண்டித்ததால் 12 வயது மாணவி தற்கொலை!!
Read Time:1 Minute, 15 Second
உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரை அடுத்துள்ள நசிபாபாத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியின் புத்தகப் பையில் செல்போன் இருப்பதை கண்டுபிடித்த வகுப்பாசிரியர், அந்த மானவியின் ஆடைகளை அவிழ்த்து சுமார் 2 மணி நேரம் அப்படியே நிற்க வைத்து தண்டித்துள்ளார்.
இதனால், வெட்கத்தாலும் வேதனையாலும் மனமுடைந்த அந்த 12 வயது மாணவி, நேற்று மாலை வீட்டில் யாருமில்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இதனையடுத்து, அந்த பள்ளியை முற்றுகையிட்ட சிறுமியின் பெற்றோர், தங்கள் மகளின் மரணத்துக்கு காரணமான ஆசிரியையை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating