மனைவியைக் கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்!!
Read Time:1 Minute, 19 Second
எம்பிலிபிடிய – பனாமுர பிரதேத்தில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றுவிட்டு கணவரொருவர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உயிரிழந்த பெண் ஒரு மாதங்களுக்கு முன்னர் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக தனது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் நேற்று அங்கு சென்ற அவரது கணவர் மனைவியைத் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.
மனைவி செல்ல மறுக்கவே அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
மேலும் விஷமருந்தி தானும் தற்கொலை செய்ய முயன்ற அவர், தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அம்பாறை – நாமல்தலாவ பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண்ணே இவ்வாறு பலியாகியுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பணாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating